×

சட்டவிரோத மது விற்பனை; 12 பேர் கைது

ஈரோடு, ஏப். 30: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன், அந்தியூர், கவுந்தப்பாடி, வரப்பாளையம், திங்களூர், அறச்சலூர், மலயம்பாளையம், பர்கூர் மற்றும் கடத்தூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 68 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

The post சட்டவிரோத மது விற்பனை; 12 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Town ,Anthiyur ,Kaunthappadi ,Varapalayam ,Thingalur ,Arachalur ,Malayampalayam ,Barkur ,Kaduur ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது